Wednesday 29 July 2009

கவிதை கூலம் 6

என் ஆசைகளின் நேரம்



மழையாய் இருக்க ஆசை தான்,
உன் இதழ் மேல் விழும்
மழை துளிகளாய்...
காற்றாக இருக்க ஆசை தான்,
உன் இடை கொஞ்சும்
இனிய தென்றலாய்...
கவிதையாக இருக்க ஆசை தான்,
உன் எழில் பற்றி இயற்றப்பட்ட
கவித் துளிகளாய்...
காதலாக இருக்க ஆசை தான்,
உன் உள்ளமெல்லாம் நிரம்பி வழியும்
உயிர்க் காதலனாய்...

No comments:

Post a Comment