Tuesday 7 July 2009

கவிதை கூலம் 3

அழகே என்னை கொல்லடி...



துடித்துக் கொண்டிருக்கும் போதே
பறித்து விட்டாய்
என் இதயத்தை...
பார்த்துக் கொண்டிருக்கும் போதே
பறித்து விட்டாய்
என் விழிகளை...
நினைத்துக் கொண்டிருக்கும் போதே
பறித்து விட்டாய்
என் எண்ணங்களை...
மீதம் இருப்பது என் உயிர்தானடி
அதையும் பறித்துக் கொள்!
சிரித்தபடி போய்
கோள் சொல்கிறேன் கடவுளிடம்,
அவன் அழகிய படைப்பின் விளைவுகள் பற்றி...

No comments:

Post a Comment